Today's Rasi Palan - 15-01-2025

பட்டியல்

விவரங்கள்

நாள்

புதன்கிழமை

திதி

துவிதியை

நட்சத்திரம்

பூசம் காலை 11.53 வரை பிறகு ஆயில்யம்

யோகம்

சித்தயோகம்

ராகுகாலம்

பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்

காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்

காலை 10.30 முதல் 11.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்

மூலம் காலை 11.53 வரை பிறகு பூராடம்

மேஷம்:


அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


ரிஷபம்:


உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.


மிதுனம்:


இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச் சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.


கடகம்:


மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.


சிம்மம்:


மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார் கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.


கன்னி:


அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத் தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடை பெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.


துலாம்:


உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத் துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.


விருச்சிகம்:


வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை தேவை.


தனுசு:


புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப் புகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.


மகரம்:


எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.


கும்பம்:


பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.


மீனம்:


எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவி னர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 14.05.2025

மேஷம்சந்திராஷ்டமத்தின் தாக்கம் காரணமாக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுத்தல் தவிர்த்து, மகாவிஷ்ணு வழிபாடால் நிம்மதி பெறலாம்.ரிஷபம்பழைய நண்பர்கள் ஆதரவு தருவர்; விசா அல்லது கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வளம் பெற, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்தாயன்பு பெருகும்; எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி; தட்சிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.கடகம்தம்பதிகள் பயணிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். உறவுகளில் மென்மை தேவை; ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும்.சிம்மம்ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். விநாயகர் வழிபாடால் சக்தி பெருகும்.கன்னிசெலவைக் குறைத்து சேமிக்க ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உருவாகும். முருகன் அருளால் சிக்கல்கள் நீங்கும்.துலாம்வீட்டுக்காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மாறும். சரபேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.விருச்சிகம்வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமை தேவை. மகாவிஷ்ணுவை வழிபட்டால் நன்மை பெருகும்.தனுசுஅலைச்சல் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Read More

Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம் மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025 தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை;   நாள்: 30 ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025 நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம் திதி :  இன்று முழுவதும் பிரதமை யோகம் :  மரண, சித்த யோகம் நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரை;  மாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை மேஷம் இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.ரிஷபம் காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால்

Read More

Indraya Rasi Palan - 10.05.2025

மேஷம் இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள், வியாபாரத்தில் விற்பனை உயர்வு, மற்றும் குடும்ப ஒற்றுமை மனநிறைவைக் கொடுக்கும்.ரிஷபம் சில சங்கடங்கள் இருந்தாலும் நிதானமாக கையாளும் போது நல்ல பலன் கிடைக்கும். தாய்வழி உதவியால் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.மிதுனம் சில குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் பிள்ளைகள் மூலம் மனநிறைவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் இன்றைய செயல்களில் வெற்றியை அளிக்கும்.கடகம் இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம்  இருப்பதால் சமாளிக்க முடியும். வேலைவாய்ப்பு, குடும்ப நலன், மற்றும் லாபம் எல்லாம் சேரும் நாள்.சிம்மம் புதிய முயற்சிகள் வெற்றியடையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.கன்னி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்ப முடிவுகளில் நன்மைகள் ஏற்படும்.   இன்றைய நாள், நிறைவான நாள். உடல்நலத்தில் கவனம் தேவை.துலாம் தந்தைவழி சொத்து கைக்கு வரும், உறவினர் சந்திப்பு செலவுகளை ஏற்படுத்தும். தொழிலிலும், உறவிலும் நன்மை

Read More