Today's Rasi Palan - 28-12-2024

பட்டியல்

விவரங்கள்

நாள்

சனிக்கிழமை

திதி

திரயோதசி

நட்சத்திரம்

அனுஷம் இரவு 10.54 வரை பிறகு கேட்டை

யோகம்

சிசித்தயோகம்

ராகுகாலம்

காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்

பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்

காலை 7.45 முதல் 8.45 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை

சந்திராஷ்டமம்

அசுவினி இரவு 10.54 வரை பிறகு பரணி





மேஷம்:



மேஷராசி அன்பர்களே! சின்னச் சின்னக் குழப்பம் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். உறவினர் கள் வருகையால் வீட்டில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் கவனம் தேவை.


ரிஷபம்:



ரிஷபராசி அன்பர்களே! உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையக் கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் எளிதாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.


மிதுனம்:



மிதுனராசி அன்பர்களே! தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற் படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட் டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட வீண்பழிகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


கடகம்:



 கடகராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் களுக்குச் சென்று குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி யுடன் செலவுகளையும் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.


சிம்மம்:



சிம்மராசி அன்பர்களே! வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர் குடும்பம் தொடர்பான முக்கிய விஷயத்தில் உங்கள் ஆலோசனையைக் கேட்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த சலுகை தள்ளிப் போகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.


கன்னி:



கன்னிராசி அன்பர்களே! மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.


துலாம்:



துலாராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவினர் களால் எதிர்பாராத செல வுகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். பிள்ளை கள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்றசெலவு ஏற்படும்.


விருச்சிகம்:



விருச்சிகராசி அன்பர்களே! உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கத்தான் செய்யும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.


தனுசு:



தனுசுராசி அன்பர்களே! தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் மனதில் சற்று சோர்வு உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். உறவினர் களால் உதவியும் உண்டு; உபத்திரவமும் உண்டு. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.


மகரம்:



மகரராசி அன்பர்களே! வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.


கும்பம்:



கும்பராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அலுவலகத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை உடனே நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.


மீனம்:



மீனராசி அன்பர்களே! இன்று மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். ஆனால், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உறவினர்களால் நன்மை உண் டாகும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் பிரசித்திப் பெற்ற கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை விமர்சித்துப் பேசினாலும் பொறுமை காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 14.05.2025

மேஷம்சந்திராஷ்டமத்தின் தாக்கம் காரணமாக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுத்தல் தவிர்த்து, மகாவிஷ்ணு வழிபாடால் நிம்மதி பெறலாம்.ரிஷபம்பழைய நண்பர்கள் ஆதரவு தருவர்; விசா அல்லது கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வளம் பெற, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்தாயன்பு பெருகும்; எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி; தட்சிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.கடகம்தம்பதிகள் பயணிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். உறவுகளில் மென்மை தேவை; ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும்.சிம்மம்ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். விநாயகர் வழிபாடால் சக்தி பெருகும்.கன்னிசெலவைக் குறைத்து சேமிக்க ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உருவாகும். முருகன் அருளால் சிக்கல்கள் நீங்கும்.துலாம்வீட்டுக்காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மாறும். சரபேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.விருச்சிகம்வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமை தேவை. மகாவிஷ்ணுவை வழிபட்டால் நன்மை பெருகும்.தனுசுஅலைச்சல் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Read More

Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம் மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025 தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை;   நாள்: 30 ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025 நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம் திதி :  இன்று முழுவதும் பிரதமை யோகம் :  மரண, சித்த யோகம் நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரை;  மாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை மேஷம் இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.ரிஷபம் காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால்

Read More

Indraya Rasi Palan - 10.05.2025

மேஷம் இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள், வியாபாரத்தில் விற்பனை உயர்வு, மற்றும் குடும்ப ஒற்றுமை மனநிறைவைக் கொடுக்கும்.ரிஷபம் சில சங்கடங்கள் இருந்தாலும் நிதானமாக கையாளும் போது நல்ல பலன் கிடைக்கும். தாய்வழி உதவியால் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.மிதுனம் சில குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் பிள்ளைகள் மூலம் மனநிறைவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் இன்றைய செயல்களில் வெற்றியை அளிக்கும்.கடகம் இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம்  இருப்பதால் சமாளிக்க முடியும். வேலைவாய்ப்பு, குடும்ப நலன், மற்றும் லாபம் எல்லாம் சேரும் நாள்.சிம்மம் புதிய முயற்சிகள் வெற்றியடையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.கன்னி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்ப முடிவுகளில் நன்மைகள் ஏற்படும்.   இன்றைய நாள், நிறைவான நாள். உடல்நலத்தில் கவனம் தேவை.துலாம் தந்தைவழி சொத்து கைக்கு வரும், உறவினர் சந்திப்பு செலவுகளை ஏற்படுத்தும். தொழிலிலும், உறவிலும் நன்மை

Read More